Blogger Widgets

பக்கங்கள்

புதன், 24 ஜூலை, 2013

கணிணியிடமிருந்து கண்களை பாதுகாக்க ஒரு மென்பொருள் .........................

நம்முடைய கணணியை காப்பாற்ற நிறைய ஆன்டிவைரஸ் சாப்ட்வேர்கள்  உள்ளன. ஆனால் நம் கண்களை பாதுகாக்க....?

இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள், சிலருக்கு கண்ணில் நீர் வரும்.

பகல் நேரங்களில் உங்கள் மானிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.

நம் மானிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மானிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.

அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இந்த  சாப்ட்வேர் மிகவும் பயன்படும்.

கிழ்க்கண்ட தளத்திற்க்குச்சென்று  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.

2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.

3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது.

கீழ்க்கண்ட தளத்திற்குச்சென்று தரவிறக்கம் செய்யவும்.
இணையதள முகவரி :http://justgetflux.com/
இப்பொழுது நீங்கள் இரவு நேரங்களில்  நீண்டநேரம் கண்சோர்வின்றி பணிபுரியலாம். வேலையும் பார்த்தாச்சு... கண்ணுக்கும் பாதுகாப்பு ஆச்சு.
நன்றி :http://bakrudeenali.blogspot.in........... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக