Blogger Widgets

பக்கங்கள்

சனி, 14 செப்டம்பர், 2013

விண்டோஸ் எக்ஸ்பியை முடிவுக்கு கொண்டு வருகிறுது மைக்கிரோசாப்ட்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் தனது பழைய ஓஎஸ் ஆன விண்டோஸ் XPக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை இனிமேல் வெளியிட போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு XP ஓஎஸ்யை பயன்படுத்துபவர்களுக்கு ஓரு கஷ்டமான விஷியாகும் அவர்கள் விரைவில் விண்டோஸ் 8 ஓஎஸ்க்கு மாற வேண்டிய நிலை உண்டாக்கியுள்ளது.

மைக்கிரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் XPக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை வெளியிடபோவதில்லை என்பதற்க்கான அர்த்தம் என்னவென்றால் இந்த ஓஎஸ்யை பயன்படுவதில் ஹாக்கர்கள் எதாவது குறையை கண்டுபிடித்தால் அதற்க்கு மைக்கிரோசாப்ட் நிறுவனம் பொறுப்பேற்காது என்பது தான்.

விண்டோஸ் எக்ஸ்பியை முடிவுக்கு கொண்டு வருகிறுது மைக்கிரோசாப்ட்
மைக்கிரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே தனது பல ஓஎஸ்களான வின்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆகிய வெர்ஷன்களுக்கு செக்கியூரிட்டி அப்டேட்களை வெளியிடுவதை நிறுத்தி இருந்தது இப்பொழுது அந்த வரிசையில் விண்டோஸ் XPயும் இணைய போகிறது.

இதுநாள் வரை விண்டோஸ் XP ஓஎஸ்யை பயன்படுத்தி பழக்கப்பட்டவர்கள் இப்பொழுது வேறு ஒரு புதிய ஓஎஸ்க்கு ஏற்றபடி அவர்களது சிஸ்டம் மற்றும் அவர்களது பழக்கத்தை மாற்றிக்கொள்ள வெண்டும். இன்று வரும் பெரும்பாலான கம்பியூட்டர்களில் விண்டோஸ் 8 ஓஎஸ் தான் உள்ளது, விண்டோஸ் XPயை பயன்படுத்தியவர்களுக்கு இந்த புதிய ஓஎஸ்யை பயன்படுத்துவது கடினமாகத்தான் இருக்கும்.

நன்றி : tamilboldsky

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக